
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக 4 இலட்சம் கிலோகிராம் பால்மா தேங்கியுள்ளதாக பால் மா இறக்குமதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்தார்.
இவ்வாறு 17 கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நிலையில் 17 பால்மா கொள்கலன்களை விடுவிப்பதற்காக 40 இலட்சம் ரூபா தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இதன் காரணமாக பால் மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க நேரிடலாம்.
கப்பலில் பால்மா ஏற்றும் போது ஒரு சட்டமும், நடுக்கடலில் திரும்பும் போது மற்றொரு சட்டமும், கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியதும் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.