
ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
இதன் போது வரவு செலவுத் திட்டம் மற்றும் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கான அழைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.இலங்கை வாங்கிய கடனை கொடுக்க முடியாத நாடாக தன்னை தானே பிரகனப்படுத்திக் கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.
ஜ.எம்.எப் இன் தேவைகளை நிறைவேற்றக்கூடிய மாதிரியான ஒரு வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.மக்கள், நடுத்தர அரச உத்தியோகஸ்தர்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஏறத்தாழ 90 இலட்சம் மக்கள் 3 வேளைக்கான உணவுக்காக தவிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை. மீண்டும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது, வரிகள் அதிகரிக்கப்படவுள்ளது, டீசல்இபெற்றோல் அதற்கான வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளது.
அரச உத்தியோகர்களுக்கோ அல்லது ஏனைய வெளி இடங்களில் தொழில் புரிகின்ற உத்தியோகத்தர்களுக்கோ சம்பண அதிகரிப்பு தொடர்பிலான விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை.ஆகவே தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் இன்னும் மக்களை பாதிக்க கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தை வாசிக்கும் போது ஜனாதிபதி ஒரு விடயம் சொன்னார்.பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்ன என்பதைஅறியவேண்டும்.இந்த மூலகாரணம் தெரியாதவர்கள் தான் ஜனாதிபதி என்ற கேள்வி கூட இருக்கின்றது.
இன்றும் கூட இலங்கை முப்படையினருக்கு வரவுச் செலவுத் திட்டத்தில் ஏறத்தாழ 41 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.முதலாவது தொகையாக உள்ளுராட்சி மாகாண சபைகள் போன்ற விடயங்களுக்கு 26.2 வீதமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நாட்டிற்கு 11.1 வீதமான பாதுகாப்பு இவ்வளவு பெருந்நிதி தொகை தேவையா என கேள்வி எழும்பினார்.
இந்தியா கூட பாதுகாப்புக்கு வரவு செலவு திட்டத்தில் 9 வீதத்தை தான் ஒதுக்குகிறார்கள்.இலங்கை இராணுவம் மக்களது காணிகளை பிடிப்பதும்,பௌத்த கோயில்களை கட்டுவது தொடர்பான வேலையில் தான் ஈடுபடுகின்றார்கள்.
தாயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் ஒட்டு மொத்தமாக நாட்டை சீர்குலைவதற்கான வரவு செலவு திட்டமாக அமைந்திருக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.