வியட்னாம் முகாமுக்குள் புகுந்த இலங்கை அதிகாரிகள்;அகதிகள் தற்கொலை முயற்சி!

சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் 306 பேர் படகு பழுதடைந்ததால் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

306 பேரையும்  நாட்டுக்கு அழைத்து வர  அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து தமிழர் ஒருவர் உட்பட மூன்று அதிகாரிகள் , வியட்நாமில் இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமிக்குள் சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளுடன் தமக்கு செல்ல முடியாது என்றும் , வலுக்காட்டாயமாக தம்மை அனுப்ப முயன்றால் தாம் தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்கு சிக்கியுள்ள இலங்கையர்கள் கூறிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு தம்மை முகவர்கள் ஏமாற்றிய நிலையில், முகாமிற்கு வந்த அதிகாரிகள் தம்மை மீள் நாட்டு வருமாறு வற்புறுத்துகின்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *