
சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி ஒப்பந்தத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் எட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தை பெற்று எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் முயற்சி செய்வதாகவும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் கடன் மறுசீரமைப்பு குறித்து கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியிருந்தது.
இலங்கைக்கான முக்கிய கடன் வழங்குனர்களான இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கான சமிக்ஞைகள் எதனையும் வெளியிடாமையினால், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை எட்டமுடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.