செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சுவிஸ் நாட்டில் வசிக்கும் வேதாரணியம் பிரபாகரன் புவிதா தம்பதிகளின் புதல்வர்களான மதுசன், மாதவன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் சுமார் 20 மாணவர்களுக்கு 60000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. 

இன்று (16), நிறுவனத் தலைவர் கு.திருக்குமரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், இ.தயாபரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
