கனடாவில் திடீரென முடக்கப்பட்ட பாடசாலை; காரணம் என்ன?

கனடாவில் பள்ளி ஒன்று திடீரென மூடப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைக்கு பொலிஸார் முற்றுகையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடசாலை இன்று காலை 8.00 மணியளவில் மூடப்பட்டதாக ஹல்டன் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் Hokeville இல் உள்ள Trafalgar உயர்நிலைப் பள்ளி மூடப்பட்டது.

என்ன மாதிரியான மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

எனினும் இந்த அச்சுறுத்தல் சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெற்றோர் மற்றும் மாணவர்கள் பள்ளியில் சமூகமளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ட்ரஃபல்கர் பள்ளி மூடப்பட்டுள்ளதாக ட்விட்டர் கணக்கு மூலம் போலீசார் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *