பொடி லெசியின் தாயாரின் பிறந்த நாளுக்காக பாரிய செலவில் விருந்துபசாரம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெசி எனப்படும் ஜனித் மதுஷங்கவின் தாயாரின் பிறந்த நாளுக்காக 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டு விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அம்பலங்கொடை பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இந்த விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பொடி லெசியின் தாயாருக்கு பிறந்த நாள் பரிசாக 15 பவுண் தங்க சங்கிலி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் இருந்து பொடி லெசி வெளியிட்ட செய்தி ஒன்றையும் தொலைபேசி ஊடாக செவிமடுக்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *