போலந்தை தாக்கிய ஏவுகணை உக்ரைனுடையதாக இருக்கலாம்: நேட்டோ தகவல்

போலந்தில் இரண்டு பேரைக் கொன்ற ஏவுகணை அநேகமாக உக்ரைனுடையதாக இருக்கலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் இந்த தாக்குதல் குறித்து கருத்த தெரிவிக்கையில், ‘பெரும்பாலும் இது உக்ரைனிய வான் பாதுகாப்பு ஏவுகணையாக இருக்கலாம். ஆனால், உக்ரைன் மீதான அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு ரஷ்யாதான் காரணம்.

இது ரஷ்யாவின் திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கான எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லை. எவ்வாறாயினும், இந்தப் போரின் போது பல முறை உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நேற்று சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்காவிட்டால், இது நடந்திருக்காது, ஏனெனில் ரஷ்யா பொறுப்பு என்பதில் சந்தேகம் இல்லை

கூட்டணியில் அங்கம் வகிக்காத உக்ரைனுக்கு அதிக மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதற்கு நேட்டோ உறுதியளித்துள்ளது.

உக்ரைனுக்கான ஆதரவுக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டேன், அங்கு நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகள் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய உறுதிமொழிகளை வழங்கினர், எனவே ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த நாங்கள் உதவ முடியும்.

ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்கான சிறந்த வழி ரஷ்யா போரை நிறுத்துவதாகும்’ என கூறினார்.

எனினும், ரஷ்யா தான் ஏவுகணையை செலுத்தியது என்று உக்ரைனே தொடர்ந்து கூறுகிறது. இது தங்கள் ஏவுகணை அல்ல என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் இது எங்கள் இராணுவ அறிக்கையின் அடிப்படையில் ரஷ்ய ஏவுகணை தான் நம்புவதாகவும் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எஸ்-300 ஏவுகணையே பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டாலும், அது ரஷ்ய தரப்பால் ஏவப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா முன்னதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *