இலவசமாக வழங்கப்படவுள்ள எரிபொருட்கள்- வெளியான மகிழ்ச்சித் தகவல்!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்  அதிகரித்துள்ளன. குறிப்பாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு துறைசார் செயற்பாடு துறைசார் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில்  இலங்கையில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையாகவுள்ள எரிபொருளை வழங்குவதற்கு கடும் நெருக்கடி நிலவும் நிலையில்இ அவர்களுக்கான எரிபொருளை சீனா வழங்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போது  நிலவும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கடற்தொழிலாளர்கள் கடும்  பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்

அதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டினால் சந்கைகளில் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அத்துடன் நெல் விவசாயிகளும் எரிபொருள் தட்டுப்பாட்டு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சீனாவினால் இலங்கையின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 1 கோடியே 6 இலட்சம் லீற்றர் எரிபொருளை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் 75 இலட்சம் லீற்றர் எரிபொருள் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளன. குறித்த எரிபொருள் தொகை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த எரிபொருள் தொகையை நெற்பயிர்ச்செய்கையின் போது வழங்க முடியாத போதிலும் அதனை நெல் அறுவடையின் போது வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சீனாவினால் விவசாயிகளுக்கு இந்த எரிபொருள் தொகை இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *