யாழில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்

யாழ்ப்பாணம் குருநகர் கடலில் மீன் பிடியில் ஈடுபட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் , யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  ஜான்சன் என்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை தனது மருமகனுடன் மீன்பிடித் தொழிலுக்கு  சென்று மீன்களை பிடித்துக் கொண்டிருந்த அவரை காணாத மருமகன் ,களங்கண்டியில் பார்த்தபோது நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டார்.

அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள்  கூறியுள்ளனர்.

மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின்  திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் நேற்று புதன்கிழமை விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடல் பரிசோதனையில் நீரில் மூழ்கி மரணம் ஏற்பட்டதாக  அறிக்கையிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *