
அரசாங்கத்தை தேர்தலை நடத்துமாறு அழைப்பது பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்குச் சமமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு இலங்கையின் அரசியலமைப்பு தடை இல்லை எனவும் ஒரே ஒரு காரணமே தேர்தலுக்கு தடையே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்குப் பின்னரான பெறுபேறுகளால் அரசாங்கம் ஆட்டம் காணப்பட்டு விடுமோ என்ற அச்சமே தற்போது தேர்தலுக்கு தடையாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசாங்கத்தை தேர்தலுக்கு அழைத்துச் செல்வது பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்குச் சமமானது என்று விசனம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் மக்கள் மற்றும் நாடு கலைக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் தவறான கருத்தை வெளியிடுவதாகவும், அது முற்றிலும் பொய்யான அறிக்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.