கடவையை உடைத்துக்கொண்டு சென்ற முச்சக்கவண்டியை மோதித்தள்ளிய ரயில்

அஹுங்கல்ல, பலபிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (17) அதிகாலை உள்ள ஹீனடிய ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மூடப்பட்டிருந்த ரயில் கடவையை உடைத்துக்கொண்டு கொலன்னாவிலிருந்து காலி நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 40 வயதுடைய ஹீனடிய பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதுடன், அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *