பஸ் நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம்,நவ 17

யாழில் புதிதாக செயற்படுத்தப்பட்ட தூர இடங்களுக்கான பஸ் நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இன்று (வியாழக்கிழமை) இணையத்தில் இடம்பெற்றது கலந்துரையாடலில் இது தொடர்பில் ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் யாழ். வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேருந்து உரிமையாளர்களை எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பிலும் ஆராய்ந்திருந்திருந்தனர்.

இதேவேளை குறித்த பேருந்து நிலைய செயற்பாடுகள் கடந்த வாரம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *