இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து இளைஞர் பயிற்சி முகாமொன்றை எதிர்வரும் 25 ம் திகதி தொடக்கம் 29 ம் திகதி வரை குச்சவெளி பிரதேச செயலகப் பகுதியின் நிலாவெளியில் நடாத்த உள்ளது .
மட்டக்களப்பு , திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த 100 இளைஞர் யுவதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தலைமைத்துவம் உள்ளிட்ட பல துறைசார் விடயங்களை உள்ளடக்கியதாக இப்பயிற்சி முகாம் அமையப்பெறவுள்ளது.
இப்பயிற்சி முகாமை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஆராயும் கூட்டம் இன்று (17)மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச் .என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கான ஒழுங்கேற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால,திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர்( தேசுய இளைஞர் சேவைகள் மன்றம்), முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.