அதிகாரம் யாருடைய கையில் உள்ளது என்று இன்று வரை தெரியாது.-தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்!

தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று  யாழில் இன்றைய தினம் இடம்பெற்றது.

எங்களுடைய தொழில் நிலைமை விட்டுக் கொடுக்க முடியாத நிலைமையில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.அதற்கான காரணம் தூர சேவை பேரூந்து சேவை நிலையம்  உருவாக்கப்பட்ட நோக்கம் வேறு.2013 ஆம் ஆண்டு குறித்த நிலையத்துக்கு அத்திவாரம் போடபட்டதாக அவர் தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகரசபையின் நிர்வாகத்துக்கு கீழே தான் இது உருவாக்கப்பட்டது.2021 ஆம் ஆண்டு குறித்த பேரூந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையம் திறக்கப்படும் போது நான் உயர் அதிகாரிகளோடனும் சம்மந்தப்பட்டவர்களோடனும் தொடர்பை வைத்திருத்தேன். ஒரு சரியான முடிவு வந்தா பிறகு குறித்த நிலையத்தை திறப்போம் என்று இருந்தோம்.

நாங்கள் தனியார் போக்குவரத்து சேவையையும், இலங்கை போக்குவரத்து சேவையையும் இலங்கை போக்குவரத்து  அட்டவணையில் செயற்படுத்த பல முயற்சிகளை எடுத்தோம்.எங்களையும் இலங்கை போக்குவரத்து முக்கியஸ்தர்களையும் அழைத்து குறித்த அட்டவணையில் சரி, பிழை இருந்தால் நீங்கள் மற்றும் பயணிகள் தரும் நேரத்தை மாற்றம் செய்து சேவையினை செய்து தருவதாக கூறினார்கள்

அதிகாரம் யாருடைய கையில் உள்ளது என்று இன்று வரை எனக்கு தெரியாது.தொழிற்சங்கத்திடம் இருக்கா?அல்லது உயர் அதிகாரிகளிடம் இருக்கா அல்லது ஆளுனரிடம் உள்ளதா? என்று ஒன்றும் புரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

சட்டத்தை கூறி அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உயர் அதிகாரிகளிடம் மட்டும் தான் காணப்படும்.இன்றைக்கும் தனியார் போக்குவரத்தில் நாங்கள் உரிமையாளரோடு கலந்துரையாடுவோம்.பயணிகள் தேவைகளுக்கு குறுக்கே நிற்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.போக்குவரத்து துறையினராலும் சட்டத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பயணிகளை இறக்க வேண்டிய இடத்தில் இறக்குவது எங்களுடைய கடமை.அதை விட்டு வேறு இடத்தில் பயணிகளை இறக்குவதும் இதிலே இறங்கி போகனும் என்று கட்டளை விதிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை.முன்னாள் மாநகர சபை முதல்வர் மணிமண்ணவன் அவர்களையும் புகழ்ந்து பேசினார்.

நாங்கள் ஒரு கிழமையாக இந்த சேவையினை செய்து கொண்டு இருக்கின்றோம்.குறுந்தூர மற்றும் நெடுந்தூர பேரூந்து உரிமையாளரும் எந்தவித ஆதாரமும் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.எனவே நாங்களும் பேரூந்து சங்கத்தின் பிரதிநிதிகளும்,ஏனைய மாவட்ட பிரதிநிதிகளும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுத்தோம்.

இறுதித் தீர்மானமாக 2 மாதகாலப்பகுதிக்குள் தீர்க்கா விட்டால் சட்ட நடிக்கை எடுப்போம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *