சுமதிபாலவுக்கு 25 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு அர்ஜுனவுக்கு உத்தரவு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு 25 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு இலங்கை தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு முன்னாள் கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஊடகங்களுக்கு அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமதிபால தாக்கல் செய்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே மவுன்ட்லவினியா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் உட்பட எந்தவொரு அரச பதவிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பொருத்தமானவர் அல்ல என அர்ஜுன ரணதுங்க தெரிவித்த அறிக்கைக்கு நட்டஈடு கோரி சுமதிபால முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த அறிக்கைகள் தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக திலங்க சுமதிபால நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *