_63770c0758e2f.jpg)
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்த மூன்று பேர் நேற்று மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சா 83 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மோப்ப நாயுடன் நடாத்திய தேடலின் போது இந்த மூவரும் சிக்கி உள்ளனர்.
தும்பளை, கரவாய், குடவத்தை பகுதிகளை சேர்ந்த 20 – 25 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைதாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.