2025ஆம் ஆண்டு முதல் இலத்திரனியல் கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது!

ஏப்ரல் 2025 முதல் இலத்திரனியல் கார்களுக்கு வாகன கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்று திறைசேரியின் தலைவர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

தனது இலையுதிர்கால அறிக்கையின் ஒரு பகுதியாக மாற்றத்தை அறிவித்த ஜெர்மி ஹன்ட், இந்த நடவடிக்கை மோட்டார் வரி முறையை நியாயமானதாக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளார்.

இந்த மாற்றம் மின்சார வாகனங்களுக்கான தேவையை குறைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று றோயல் ஆட்டோமொபைல் மோட்டார் குழுமம் தெரிவித்துள்ளது.

ஆனால், மின்சார வாகனங்கள் உட்பட மற்றவர்கள் இந்த நடவடிக்கை மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான ஊக்கத்தைக் குறைக்கும் என்று எச்சரித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹன்ட், ‘வரவு செலவு திட்டத்திற்கு பொறுப்புக்கான அலுவலகம், எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து புதிய வாகனங்களில் பாதி மின்சாரமாக இருக்கும் என்று கணித்ததால், எங்கள் மோட்டார் வரி முறையை நியாயமானதாக மாற்ற, நான் முடிவு செய்துள்ளேன், அதிலிருந்து மின்சார வாகனங்கள் வாகனத்திலிருந்து விலக்கு அளிக்கப்படாது’ என கூறினார்.

வாகன கலால் வரி (VED) என்பது பிரித்தானிய வீதிகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி. தற்போது, மின் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாகனத்தைப் பொறுத்து வெவ்வேறு கட்டணங்கள் உள்ளன.

இன்று வகுக்கப்பட்ட திட்டங்களின்படி, ஏப்ரல் 2025ஆம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட இலத்திரனியல் கார்கள் முதல் ஆண்டில் 10 பவுண்டுகள் என்ற மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தும், பின்னர் தற்போது 165 பவுண்டுகளாக இருக்கும் நிலையான கட்டணத்திற்கு மாறும்.

ஏப்ரல் 2017ஆம் ஆண்ட க்குப் பிறகு முதலில் பதிவுசெய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கும் நிலையான கட்டணம் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *