கிழக்கில் இரவு வேளை கள்ள மண் வியாபாரம் அமோகம் – சாணக்கியன் எம்.பி சாடல்

 வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விவசாயக் கண்டங்களில் சட்டவிரோத மண் அகழ்வு பணிகள் இரவு வேளைகளில் இடம்பெற்று வருகின்ற நிலையில், யாரும் அதை கண்டுகொள்ளவிலை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை  தடுத்து நிறுத்தாமல் பாராமுகமாக இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கெதிராக மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று மாலை வாகநேரி நீர்பாசனத்திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளினால் தங்கள் பிரதேச விவசாயக் கண்டங்களில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வினால் ஏற்படும் பாதிப்பின் தாக்கம் குறித்து நேரில் வந்து பார்வையிடுமாறு விடுத்த வேண்டுகோளினையடுத்து குறித்த பிரதேசங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சென்றார்.

  பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடங்கள் மண் அகழ்வினால் பாதிக்கப்பட்ட பாலங்கள்,வாய்க்கால்கள் வீதிகள் மற்றும் மணல் சேகரிக்கப்படும் இடங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது தெரிவித்ததாவது:

எமது மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் வட்டவானில் பொதுமக்களின் காணிகள் இரால் பண்ணைக்கென பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.கிரான் பிரதேசத்தில் மயிலத்தமடு மேச்சல் தரை பிரதேசம் பிரச்சினை,வாகநேரியில் சட்ட விரோத மண் அகழ்வு பிரச்சினை என பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன.

மாவட்டத்தில் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் கூட ,தானே நேரில் சென்று கவனிக்கவேண்டி தேவையுள்ளதாக தெரிவித்தார்.பயிர்களை பாதுகாக்கும் வேலிகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *