கொழும்பு,நவ 18
பெண்களை வலுப்படுத்துவது தொடர்பாக தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களுக்குள் பூர்த்திசெய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி அவசியமாக இருந்தால், தூதரகங்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.