மேல்மாகாண பரீட்சை கசிந்தது?தொடர்பில் விசாரணை

கொழும்பு,நவ 18

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பாடசாலை பருவப் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை இன்று (18)  ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு கல்வி வலயத்தின் வினாத்தாள்கள் கொம்பனி. வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள கொழும்பு வலய அலுவலகத்தின் தலையீட்டில் அச்சிடப்பட்டதாகவும் அதன் காரணமாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று அந்த அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *