தனுஷ்கவிற்கு பணம் வழங்கிய இலங்கையர் யார்?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகேவுக்கு 150,000 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தொகையை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரினால் வழங்கப்பட்டதாகவும், தனுஷ்க குணதிலக்கவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு இதுவரையில் வெளியாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

பிணை பெறும்போது அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு நிரந்தர முகவரியை வழங்க வேண்டியிருப்பதால், குணதிலக்கவுக்கு அந்நாட்டில் உள்ள செல்வந்தர் ஒருவரின் வீட்டின் முகவரி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டிலேயே அவர் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வழக்கு முடியும் வரை அவரது செலவுகளை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் ஏற்க முன்வந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *