விளம்பின் குரல் அமைப்பின் அறிமுக நிகழ்வும், சர்வதேச திருநர் நினைவேந்தலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது கலையக அரங்கில் நடைபெற்றது.
உலக வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தம் உயிர்களை மாய்த்துக்கொண்ட திருநங்கைகள், திருநம்பியர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் திருநர் தொடர்பான ‘ எங்கள் குரல்கள் உங்கள் காதுகளில் ஒலிக்காதா ?’ எனும் ஆவணப்பட காட்சிப்படுத்தலும் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.