வவுனியாவிற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது ஜனாதிபதி மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளார்.
இதையடுத்து அங்கு ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகேட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.