_637873ec660b2.jpg)
வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் Visitor விசாவில் அபுதாபிக்குள் நுழைந்த 17 இலங்கை பிரஜைகள் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக பொலிஸார் மற்றும் தூதரக பிரதிநிதிகளால் 17 இலங்கையர்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
தூதரக ஊழியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர், அவர்களில் ஒருவர் இலங்கைக்கு திரும்ப ஒப்புக்கொண்டதையடுத்து, தூதரகம் அவரை திருப்பி அனுப்பியது.
இருப்பினும், சரியான சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளை கடைப்பிடிக்க தூதரகத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், கடந்த நவம்பர் 15ஆம் திகதி ஏனையவர்கள் ஓமனுக்கு புறப்பட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.