செல்வநகரைச் சேர்ந்த எல்.டீ.டீ.ஈ யின் முன்னாள் பெண் போராளியான திருமதி எஸ்.சரஸ்வதி மற்றும் அவரது மகளுக்கு கிளிநொச்சி செல்வநகரில் இராணுவ மனிதாபிமான சிந்தனை காரணமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் புதிய வீடொன்றும நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கபட்டுள்ளது.
மேலும் இதேவேளை அவர் மகளுக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இவ் வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் இத் திட்டத்தினை மேற்பார்வை செய்துள்ளார்.
லெப்டினன் கேணல் எஸ்எஸ்ஏ நாராயணகே தலைமையில் 7 வது இலங்கை இலேசாயுத காலட் படையணி படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவலுவினை பயன்படுத்தி இவ் வீட்டை நிர்மாணித்துள்ளனர்.
642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத் அவர்களின் ஒருங்கிணைப்பில் அமெரிக்காவில் வாழும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் இவ் வீட்டை நிர்மாணிப்பதற்காக 1.7 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய வீடு அண்மையில் இந்து சம்பிராதாய முறைகளுக்கமைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.