ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அமைச்சுப் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியுள்ளதாக அதன் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 அமைச்சுப் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளதாகவும், அது பாதீட்டு வாக்கெடுப்பின் பின்னர் இடம்பெறக்கூடும் என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடு திரும்பியதன் பின்னர், அடுத்த தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தயார்ப்படுத்துவதற்கு திட்டமிடப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக, அதன் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.