
தவறான தகவல்களுக்கு எதிராவோம் எனும் தொணிப் பொருளின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு இன்று சனிக்கிழமை திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களை சேர்ந்த சுமார் 30 ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இச்செயலமர்வை நடாத்தியிருந்தது. இதற்கான அனுசரணையை CFLI, MYTHOS LABS ஆகிய அமைப்புக்கள் வழங்கியிருந்தது.
இச்செயலமர்வில் போலிச் செய்திகளை இணங்காணல், பிழையான செய்திகளை கண்டறிதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும்,தவறான தகவல்கள் பொதுமக்களுக்கு போகாத வகையில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இச் செயலமர்வை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பீ.எ.பைரூஸ் நிகழ்த்தியிருந்தார்.