இயக்கச்சியில் கோயில் கட்டுமாண பணியில் இருந்த பணியாளர் ஒருவர் உயிரிழப்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி  முகாவில் பகுதியில் கோயில் கட்டுமாண பணியில் இருந்த பணியாளர் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது பளை இயக்கச்சி முகாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.கோயில் கட்டிட வேலை ஒன்றில் கொங்கிரிட்  போடும் வேலை இடம்பெற்று கொண்டிருந்த போது முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த மரங்கள் விழுந்தமையால் குறித்த பணியாளர் மேலிருந்தை கட்டிட இடிபாட்டுக்குள் விழுந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் இறந்தவர் தவபாலன் சதீசன் வயது (27) யாழ்ப்பாணம் சுழிபுரத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வருகின்றது.

மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *