ஆசிரியர் பற்றாக்குறைகளை கணிசமானளவு குறைக்க அமைச்சர் டக்ளஸின் யோசனை

ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணிசமானளவு குறைக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன், வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது இவ்வாறு கருத்து தெரிவித்துருந்த அமைச்சர் மேலும் கூறுகையில் –

ஆசிரிய நியமனங்கள் மாத்திரமன்றி அனைத்து அரச நியமனங்களிலும் குறித்த பொறிமுறையை நியமிப்பது ஆரோக்கியமானது எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *