கொழும்பு,நவ 20
தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று (20) இலங்கை வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்தபோது இருபத்தியோராம் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, பசில் ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாகப் பங்களிக்கப் போவதாகத் தெரியவருகிறது.