சீனா தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனாவின் புதிய அலை!

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்றின் புதிய அலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் புதிய அலை எழுந்துள்ளதால், வணிகவளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் பெய்ஜிங்கில் மாத்திரம் 515 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் பெய்ஜிங் நகரில் அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *