இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, பத்து அரச நிறுவனங்களும், இரண்டு தனியார் நிறுவனங்களும் விமானங்களை வாடகைக்கு வாங்கி பின்னர் இலங்கை விமானப்படைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாவை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை மூன்றாண்டுகளாக மீட்கப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

தேசிய தணிக்கை அலுவலகம் பண ஒழுங்கு முறை 128 (2) இன் படி இந்த வருவாயை தாமதமின்றி வசூலிக்க ஏற்பாடுகள் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.

விமானப்படைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு உத்தரவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *