இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என நம்பக்கூடிய ஒரே அரசியல் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இராஜதந்திரிகளுடன் இணைந்து ஏதாவது செய்ய முடியும் என நம்பக்கூடிய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே, அதைவிடுத்து நாட்டை கட்டியெழுப்புவார் என நம்பக்கூடிய இன்னொரு தலைவர் இருந்தால் தமக்கு கூறுமாறும் குமார் வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.