ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரின் உள்நாட்டு முகவர் கைது

டுபாய் மற்றும் ஓமான் நாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் உள்நாட்டு முகவரும் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஓமான் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று நீர்க்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்கேகநபர் நேற்று காலை இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *