இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பஸ் கட்டணங்கள் அடுத்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு முன்னதாக, வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து, வரி ஆய்வு நடத்தப்பட்டு, தனி முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் புதிய VAT சட்டமும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் மீது வாட் வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது வாட் வரி அமல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

இது தவிர, 2023 ஏப்ரல் 1 முதல் தற்போது வாட் வரி விதிக்கப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் சதவீதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், புதிய வரி விதிப்பு காரணமாக எரிபொருள் விலை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள போக்குவரத்துத் துறையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களுக்கும் வாட் வரி விதிக்கப்படும்.

[எரிபொருள் விலை அதிகரிப்பால் ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அனைத்து அரசு சேவை கட்டணங்களும் 20 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.

நெடுஞ்சாலை கட்டணம், திருமண பதிவு கட்டணம், நிறுவன பதிவு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களும் அதற்கேற்ப அதிகரிக்கும்.

இதுவரை, எரிபொருள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில் இருந்து வாட் வரி விலக்கு அளிக்கப்பட்டதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக ஆண்டுக்கு 1 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *