வரும் வாரம் முதல் ரயில் நேர அட்டவணையை முழுமையாகத் திருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில் இறுதி இலக்கை அடைவதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாகவே இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளால், வேகத்தடை விதித்து, வழக்கமான அட்டவணைப்படி இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அலுவலக ரயில்கள், கொழும்பு கோட்டை மற்றும் ஏனைய இடங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அலுவலக ஊழியர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு புகையிரத நேர அட்டவணைகளை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.