ராஜபக்சாக்கள் இராணுவத்தினரின் நலனுக்காக என்ன செய்துள்ளனர்..? சஜித் பிரேமதாச

கொழும்பு, நவ 20

அன்று முப்பது வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவம், இன்று நாட்டை அழித்த கும்பலை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதியில் இறங்கிய போது அவர்கள் மீது ஒரு தோட்டாக் கூட பிரயோகிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளர்.

இந்நாட்டின் முப்படைகளின் தலைமையிலான பாதுகாப்புத் துறையினர் மக்கள் போராட்டத்திற்கு மௌனமாக இருந்து பங்களிப்பை வழங்கியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் என்பது நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்த ஒரு பகுதியினர் என்றும் அவர் தெரிவித்தார்.

அன்று அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதாக செயற்பட்ட அரசாங்கம்,அவற்றில் ஒன்றையாவது வழங்கியதா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,என்றாலும் தான் ஜனாதிபதித் தேர்தல் காலப்பிரிவில் அனைத்துப் பாதுகாப்புப் படையினருடனும் சமூக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது சந்தர்ப்பவாத ஒப்பந்தமல்ல எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நிலையான தீர்வுகள் மூலம் இராணுவத்தினரை வலுவூட்டுவதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட ஐக்கிய இராணுவ சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *