மீண்டும் சர்வகட்சி அரசாங்க கலந்துரையாடல்: போர்கொடி தூக்கும் மொட்டு கட்சி எம்.பிகள்

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் விசேட கூட்டமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். “சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும்” என மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில்,

அதற்காக ஜனாதிபதியுடன் கலந்துரையாட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் முக்கியமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. எமக்கு அமைச்சர் பதவியை வழங்காமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதி எவ்வாறு அமைச்சர் பதவியை வழங்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *