மன்னார்,நவ 20
தலைமன்னார் இறங்குதுறையினை பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதனைப் புனரமைத்து பிரதேச மக்கள் நன்மையடையும் வகையில் செயற்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.
குறித்த துறைமுகம் புனரமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வேண்டுகோள் முன்வைத்து வந்த நிலையில், ஜனாதிபதி இன்றைய விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.