அழகிய இளமைப் பருவம் போதையால் இருளில் மூழ்கும் நிலை! யாழில் விழிப்புணர்வு

வடக்கில், குறிப்பாக யாழில் போதைவஸ்தின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பன பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இளவாலை மறைக்கோட்ட பொது நிலையினர் கழகத்தினர் இன்றையதினம் (20) மானிப்பாய் அந்தோனியார் ஆலய வளாகத்தில் போதைக்கு எதிரான போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

போராட்டக்காரர்கள் “போதையில் இருப்பது உங்களது சகோதரர்கள் பிள்ளைகள் என்பதை மறவாதே, போதைப்பொருள் பாவனை நமக்கு நாமே வைக்கும் சூனியம், தண்டிக்கப்பட்டு திருத்த முடியாத பிள்ளை நாளை தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும், அழகிய இளமைப் பருவம் போதையால் இருளில் மூழ்கும் நிலை” என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *