ஓமானுக்கு பெண்களை கடத்தி விற்றமை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில், பிரபல நடிகர் துஷ்யந்த் வீரமன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
துஷ்யந்த் வீரமனின் வீட்டில் சில காலம் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் சட்டவிரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக அவர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.