திருகோணமலை – நல்லூர் கிராமத்திலுள்ள காட்டுப் பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் காணப்படுகின்றது.
இவ் யானையானது நேற்று சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்திருக்க கூடுமென நல்லூர் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த யானை எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்த யானையின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
உயிரிழந்த யானையின் சடலம் இன்னும் மீட்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.