பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

ஊவா மாகாணத்தின் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிற்கும், அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றும்

தொழிலாளர்களுக்கும் இடையில் இன்று (நவ.20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கெடுபிடிகளுக்கு எதிராக இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களிலிருந்து ஒரு கிலோகிராம் தேயிலை கூட வெளியில் செல்ல அனுமதிக்கப்படாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *