வேலை பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய 4 பேர் கைது

ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக சமூகவலைத்தளங்கள் மூலம் விளம்பரம்செய்து, நேர்காணல் நடத்திய மோசடியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைக் குழுவினர் இன்று சுற்றிவளைப்பொன்றை முன்னெடுத்தனர்.

அதன்போது, பதுளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் வைத்து குறித்த சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில், இத்தாலி நாட்டவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *