இலங்கையில் தடையின்றி எரிபொருளை வழங்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய அடுத்த வருடத்தில் மேலதிக எரிபொருளை கொள்வனவு செய்து சேமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் 72 ஆயிரத்து 600 மெற்றிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் மேலதிகமாக இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக சுமார் 62 இலட்சம் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நாட்டின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப மற்றுமொரு தொகை மசகு எண்ணெயை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.