சுற்றுலா விசாவில் 5000க்கும் அதிகமானோர் தொழிலுக்காக துபாய்க்கு!

சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டில் இருந்து ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் துபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சில தரப்பினர் இதுவரையிலும் அந்த சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை, வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி இலங்கை பெண்களை ஓமானுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பும் வர்த்தகம் தொடர்பில் எமதுச் செய்தி சேவை தகவல் வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா விசாவை பயன்படுத்தி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் துபாய்க்கு சென்றுள்ளதாக தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

எவ்வாறாயினும், தற்போது துபாய் சென்று பல்வேறுப்பட்ட இன்னல்கள் காரணமாக அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள பெண்கள் உள்ளிட்ட நபர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குடியேறிகள் வேலைத்திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *