சிறையில் இருக்கும் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்டகால தண்டனை!

பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

தற்போது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக, கைதிகள் வழக்கமாக அதிகபட்சமாக 42 நாட்கள் சிறைத்தண்டனையைப் பெறுவார்கள்.

ஆனால், சிறையில் பயங்கரவாதிகள் செய்யும் குற்றங்கள், சிறியதாக இருந்தாலும் இப்போது குறிப்பிடத்தக்க வகையில் அதிக சிறைத் தண்டனைக்கு அது வழிவகுக்கும் என்று நீதித்துறை செயலாளர் தெரிவித்தார்.

செல்களை நாசப்படுத்துவது போன்ற குற்றங்கள் நடந்தால் ஒரு வாரத்திற்குள் அவர்கள் விசாரணைக்கு அனுப்பப்படுவார்கள்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் பயங்கரவாதச் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் பயங்கரவாதச் சட்டத்தின் சுயாதீன மதிப்பாய்வாளர் ஜொனாதன் ஹால் கேசி ஆய்வு செய்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் சமூகங்களை தங்கள் வழிகளை மாற்ற விரும்பாதவர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று ராப் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பயங்கரவாத குற்றவாளிகள் பொது பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறார்கள். மேலும் அவர்களின் செயல்களின் முழு விளைவுகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *