சுற்றுலா விசாவுக்கான காலத்தை மீறி ஓமானில் தங்கியிருக்கும் இலங்கைப் பெண்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் இதை நடைமுறைப்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கு சிக்கியுள்ள பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு விமான டிக்கெட்டில் பிரச்சனை இருப்பதாகவும் கூறினார்