பசிலுக்கு விஐபி சிகிச்சை, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரின் வரவேற்பு – சபையில் எதிர்க்கட்சி கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவை பல அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்நிலையில் எந்தவொரு முக்கிய அரசாங்கப் பதவிகளையும் வகிக்காத தனிநபருக்கு வழங்கப்படும் விசேட சிகிச்சைகள் குறித்து எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத பசில் ராஜபக்சவுக்கு விமான நிலையத்தில் எப்படி பிரமுகர் ஓய்வறை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

முன்னாள் அமைச்சர் ஒருவரை வரவேற்கும் நடவடிக்கையில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோவும் ஈடுபட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஒருவரை வரவேற்கும் நடவடிக்கையில் அவ்வாறான ஆணைக்குழுவின் தலைவர் ஈடுபட்டுள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவ உத்தேசித்துள்ளது என்றும் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.

அத்தகைய நபர்கள் சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் தேசத்தின் அபிவிருத்திக்கும் இடையூறாக உள்ளனர் என்றும் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *